logo

Friday 1 June 2018

Introduction of New Train

புதிய ரெயில் அறிமுகம்.
 பகல் நேரத்தில்...புதுக்கோட்டை வழியாக ... Chair Car வசதியுடன்... முழுவதும் முன்பதிவில்லா புதிய ரெயில்.
தாம்பரம் 卐 செங்கோட்டை
 ரெயில் எண் 16189
தாம்பரம் பு. நேரம்  …….….07:00
செங்கல்பட்டு....................07:30
விழுப்புரம்  ………………….…09:20
மயிலாடுதுறை ................11:35
கும்பகோணம் ..................12:10
தஞ்சாவூர்..........................12:45
திருச்சிராப்பள்ளி.............14:25
புதுக்கோட்டை.................15:15
காரைக்குடி........................16:00
மானாமதுரை....................15:30
அருப்புக்கோட்டை............18:15
விருது நகர்........................18:45
சிவகாசி.............................19:05
ராஜபாளையம்.................19:40
சங்கரன்கோவில்.............19:55
தென்காசி..........................20:35
செங்கோட்டை...................22:30
செங்கோட்டை 卐 தாம்பரம்
 ரெயில் எண் 16190
செங்கோட்டை  பு. நேரம்   06:00
தென்காசி...........................06:12
சங்கரன்கோவில்...............06.56
ராஜபாளையம்...................07.22
சிவகாசி...............................07.52
விருதுநகர்...........................08:20
அருப்புக்கோட்டை..............08.45
மானாமதுரை......................09.20
காரைக்குடி..........................10:30
புதுக்கோட்டை...................11.35
திருச்சிராப்பள்ளி...............13.00
தஞ்சாவூர்.............................13.45
கும்பகோணம்.....................14.22
மயிலாடுதுறை....................15.30
விழுப்புரம்............................19.40
செங்கல்பட்டு.......................21.20
தாம்பரம்...............................22:30
பிறருக்கும் பகிர்வோம்....,.
பலனடைவோம்

Friday 25 November 2016

TRAIN SEAT SELECTION - AUTOMATIC TRICKS

*ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?*
நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒருமுறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்பட கேட்டிருப்போம்.
ஆனால், இது ஏன், எதனால் பஸ்களில் விருப்பமான சீட் புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ?
*உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...*
*தியேட்டரும் - ரயில் வண்டியும்!*
நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம்.
ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.
கோச்! பொதுவாக ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.
*டிக்கெட் புக் ஆகும் முறை!*
நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.
பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.
*புவியீர்ப்பு மையம்!*
ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.
*கடைசி நேரத்தில்...*
கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம்.
*சற்று யோசியுங்கள்!*
நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு.
இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது.